Blog

  • Home
‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்பது எல்லாம் இன்று வாசகங்களாகவே இருக்கின்றன. மரம் வளர்ப்பிற்கு யாரும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை.

தமிழக வனத்துறை சார்பில் பல லட்சங்கள் செலவழித்து மரம் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தொடக்க விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் வி.ஐ.பிக்களும், அதிகாரிகளும் அதன்பிறகு அந்த மரங்களை கண்டுக்கொள்வதில்லை. சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் அவைகள் பட்டுபோய்விடுகின்றன. அடுத்து, சாலை விரிவாக்கம், நகர வளர்ச்சி உள்ளிட்ட காரணங்களுக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. இதனால் தமிழகத்தில் மரங்களின் எண்ணிக்கை ஆண்டுந்தோறும் குறைந்து வருகின்றன.

டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் பூங்கா, அரசு அலுவலகங்கள், சில சாலைகளில் மட்டுமே மரங்களைப் பார்க்க முடிகிறது. குறுகிய இடத்தில் பலமாடி கட்டி வாடகைக்கு விடப்படும் வீடுகளில் மருந்துக்கு கூட மரங்கள் இருப்பதில்லை. கிராமங்களில் கூட வறட்சிக் காரணமாக மரங்களின் எண்ணிக்கை குறைந்து வருகின்றன. வரலாற்று புத்தகத்தைப் புரட்டினால் சாலையோரங்களில் அரசர்கள் மரங்களை வளர்த்தனர் என்பது குறிப்பிட்டு இருக்கும். இன்று அந்த மரங்களை நாம் வெட்டி வருகிறோம். இதே நிலை நீடித்தால் கையிலிருக்கும் லேப்-டாப்பில் தான் மரங்கள் குறித்த விவரங்களையும், அதன் புகைப்படங்களையும் வருங்கால சந்ததியினர் காண வேண்டியதிருக்கும்.

மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு மக்களிடையே பெரியளவில் சென்றடையவில்லை. காடுகள் அழிக்கப்படுகின்றன. பிளாட்களுக்காக விளைநிலங்கள் வீடுகளாக்கப்படுகின்றன. இதன் காரணமாக வறட்சியின் பிடியில் சிக்கும் நிலையில் இந்தியா தள்ளப்பட்டுள்ளது. மரங்களின் எண்ணிக்கை குறைந்தால் மழை குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு தாண்டவமாடுகிறது. இருப்பினும் மரங்களை வளர்ப்பில் அக்கறை செலுத்தும் ஆர்வலர்கள் கொஞ்சம் இருப்பதினால் ஆங்காங்கே இன்னமும் மரங்கள் இருக்கின்றன.

அழிந்து வரும் மரங்கள்: முன்பெல்லாம் சாலையோரங்களில் ஆலமரமும், அரச மரமும், புளிய மரமும் அதிகமாக காணப்படும். கிராமங்களிலும் இந்த மரங்களை அதிகளவில் பார்க்கலாம். இதில் ஆலமரத்துக்கும், அரச மரத்துக்கும் இடம் அதிகம் தேவை. இதைக்கருத்தில் கொண்டு ஆல, அரச மரங்களை வளர்க்க யாரும் முன்வருவதில்லை. இதனால் இந்த மரங்கள் அழிந்து வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

×