நீரிழிவு:
“தண்ணீர் விட்டான் கிழங்கை பால் சேர்த்து அரைச்சு காயவச்சு பொடி செஞ்சு, தினமும் ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா நீரிழிவு குணமாகும்.”
உடல் உஷ்ணம்:
”தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடியை பாலில் கலந்து குடிச்சிட்டு வந்தா உடல் உஷ்ணம் தணியும்.”
காய்ச்சல்:
“காய்ச்சல் இருக்கிறவங்க தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50 கிராம் எடுத்துப் பொடி செஞ்சு, தினமும் ரெண்டு வேளை 2 கிராம் பொடியை தேன்ல குழைச்சு சாப்பிட்டா, நல்ல பலன் இருக்கும்.”
உடல் பலமாக:
“தண்ணீர் விட்டான் கிழங்கை நல்லா கழுவி, மேல்தோலை நீக்கி, காயவச்சு தூள் செஞ்சுட்டு, அந்த தூளை 2 கிராம் அளவு பசு நெய்யில கலந்து, தினமும் காலை, மாலை ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா உடல் பலமாகும்.”
ஆண்மை பெருக:
“ஆண்மை பெருக விரும்புறவங்க தண்ணீர் விட்டான் கிழங்கை காயவச்சு தூள் செஞ்சிட்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் ரெண்டு வேளை, ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம், கூட ஒரு டம்ளர் பால் குடிச்சிட்டு வரணும்.”
Reviews
There are no reviews yet.